பம்புசெட், உதிரிபாகங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினைக் குறைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை குறைக்கக்கோரி கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கோவை பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர். அதில் பம்புசெட், உதிரிபாகங்கள், போர்வெல் கம்ப்ரசர்கள் நிறுவனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியினை 5 சதவிகிதமாக குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி வரி விதிப்பினால் சிறு, குறு தொழில் முனைவோர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் பறிக்கப்பட்டு உள்ளது. ஜிஎஸ்டி வரியினால் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி எண் இருந்தால் மட்டுமே பெரிய நிறுவனங்கள் ஜாப் ஆர்டர்கள் வழங்குகின்றனர். விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் முக்கிய கருவிகளான பம்புசெட், கம்ப்ரசர்கள் உள்ளிட்டவற்றிக்கு அதிகப்படியான வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்கள் நசியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜிஎஸ்டி வரியினை குறைக்கவில்லை எனில், போராட்டங்களும் நடத்தப்படும். 

இவ்வாறு பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...