விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்- திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் பேட்டி


விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

விவசாய விரோத கொள்கையை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநில விவசாய அணி அமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்று விவசாய விரோத கொள்கையை மத்திய மாநில அரசுகள் கடைபிடிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் பொங்கலூர். பழனிசாமி, திமுக உயர்மட்டக் குழு உறுப்பினர் கண்ணப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சியினரிடம் ஆதரவு கேட்கப்பட்டு கடந்த 30-ம் தேதி முதலமைச்சரை சந்தித்து விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலான்மை வாரியம் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முறையிடப்பட்டது. அப்போது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழா உரையில் விவசாயிகள் சார்ந்த எந்த ஒரு அறிவிப்பும் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 



உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். 

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...