விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும்- திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் பேட்டி


விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் பேட்டியளித்துள்ளார்.

விவசாய விரோத கொள்கையை கடைபிடிக்கும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநில விவசாய அணி அமைப்பு சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், கொ.ம.தே.க உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் பங்கேற்று விவசாய விரோத கொள்கையை மத்திய மாநில அரசுகள் கடைபிடிப்பதாக கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

திமுக மாநில விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் ந.கார்த்திக், சொத்து பாதுகாப்பு குழுத் தலைவர் பொங்கலூர். பழனிசாமி, திமுக உயர்மட்டக் குழு உறுப்பினர் கண்ணப்பன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர்.



பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய அணி அமைப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது:-

விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக அனைத்து கட்சியினரிடம் ஆதரவு கேட்கப்பட்டு கடந்த 30-ம் தேதி முதலமைச்சரை சந்தித்து விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலான்மை வாரியம் அமைக்க நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து முறையிடப்பட்டது. அப்போது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்தார். ஆனால் நேற்று நடைபெற்ற சுதந்திர தினவிழா உரையில் விவசாயிகள் சார்ந்த எந்த ஒரு அறிவிப்பும் வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. 



உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாவிட்டால் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார். 

Newsletter

கோவை வடக்கு மண்டல வளர்ச்சித் திட்டங்களை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் மற்றும் ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் இணைப்பு பா...

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...