கோவை ரயில் நிலைய முகப்பில் உதகை ரயில்: வாழ்வாதாரம் கேள்விக்குறியாவதாக ஆட்டோ ஓட்டுனர்கள் வேதனை

கோவை ரயில் நிலையத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், ரயில் நிலையத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு பணிகளை ரயில்வே நிர்வாகம் செய்து வருகிறது.

முன்னதாக ரயில் நிலையத்தின் முன்பு இருந்த பழைய முகப்பு அகற்றப்பட்டது. தற்போது அந்த இடத்தில் பழமையான உதகை ரயில் எஞ்சின் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.



1880-களில் உதகைக்கு மலைப்பாதை வழியே பயணித்த இந்த ரயில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் எஞ்சின் வைக்கப்பட்டுள்ளதோடு, கோவை ரயில் நிலையத்தின் முன்புறம் 10 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. இதனால், அங்கு இருக்கும் ஆட்டோ நிறுத்தும் இடத்தை காலி செய்யுமாறு ஆட்டோ ஓட்டுனர்களை ரயில்வே நிர்வாகம் கோரியுள்ளது.



ரயில்வே நிர்வாகத்தின் இந்த முடிவால் 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளதாகவும், ரயில் நிலையத்திற்குள் வாடகை கார்களுக்கு நிறுத்த இடம் கொடுத்திருப்பது போல் ஆட்டோக்களை நிறுத்தவும் அனுமதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், தற்போது கோவை ரயில் நிலையத்தின் முகப்பில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் எஞ்சினின் முன்புறம் ஆட்டோக்களை நிறுத்திய ஓட்டுநர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு வந்த போலீசார் ஆட்டோ ஓட்டுநர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை அப்புறப்படுத்தினர்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...