டாக்டர் மோகன்’ஸ் டயாபிடிஸ் ஸ்பெஷாலிட்டி செண்டரில் ஆரோக்கிய உணவு சமையல் போட்டி

சர்க்கரை எனப்படும் நீரிழிவு நோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதில் சல்ல சமநிலையிலான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பழக்கம் முக்கியமானதாகும். இந்த உணவு சிறப்பு உணவு என்றும், சர்க்கரை நோயாளிகள் மட்டுமே சாப்பிட முடியும், இது மிகவும் சாதுவான சாப்பிடுவதற்கு போரடிக்கக்கூடியது என்றும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு குறித்து தவறான கருத்துக்கள் நிலவுகிறது.

டாக்டர் மோகன் டயாயிடிஸ் ஸ்பெஷாலிட்டி செண்டர், இந்தத் தவறான கருத்தை புறந்தள்ளுகிறது என்பதுடன், வாயில் எச்சில் ஊரக்கூடிய உணவுவகைகளை தயாரிப்பது என்றும் இது ஆரோக்கியமானது மட்டும் இன்றி தயாரிப்பது எவ்வளவு சுலபமானது என்றும், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் ஏற்றது என்றும் விளக்குகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சமைப்பது என்ற சிறப்பு சமையல் விளக்க நிகழ்ச்சி ஆகஸ்ட் 6ம் தேதி (இன்று) கோவை, அவிநாசி சாலையில் அமைந்துள்ள ஸ்ரீவாரி ஸ்ரீமத் கட்டிடத்தில் உள்ள மோகன்ஸ் ஸ்பெஷாலிடி டயாபிடிஸ் செண்டரில் நோயாளிகள் மற்றும் நுகர்வோருக்காக நடத்தியது.



சமையல் கலைஞர் திருமதி மது வாத்வா, ஃபிளேக்ஸ் அடை, சென்னா மஷ்ரூம் சல்மா, ஸ்பிரௌட் சப்பாத்தி, டோஃபு சட்னி, உள்ளிட்ட எட்டு வகையான உணவு வகைகள் குறித்த செயல்விளக்கத்தை செய்து காட்டினார். இந்த உணவு வகைகள் தயாரிப்பதற்கு குறைவான நேரமே ஆகும் என்பதால் இவற்றை வீடுகளில் அன்றாடம் தயாரிக்கலாம்.

டாக்டர் மோகன்ஸ் ஸ்பெஷலிட்டி டயாபிடிஸ் மையத்தின் ஆலோச௧ர் டாக்டர் ரவி கண்ணன் கூறுகையில், “டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் அவர்கள் தாங்கள் பெறும் சிகிச்சை மற்றும் உட்கொள்ளும் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளுக்கு அப்பாற்பட்டு, அவர்கள் உட்கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமாகும். நீரிழிவை நிர்வகிப்பதில் உணவுப் பழக்கம் மற்றும் உடற்பயிற்சி முக்கியப் பங்கு வகிகிறது எனப்தால் இதனை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இந்த செயல்விளக்க நிகழ்ச்சியானது சர்க்கரை நோயாளிகள் மற்றும் நுகர்வோரை கருத்தில் கண்டு நடத்தப்பட்டது, ஏனெனில் அவர்களில் பலர், சர்க்கரை நோயாளிகளுக்கான உணவை வீட்டிலேயே தயாரிப்பது குறித்து அடிக்கடி கேட்கின்றனர்” என்றார்.

சமையல் கலைஞரான மது வாத்வா, “சர்க்கரை நோயாளிகளுக்கான உண்வு என்பது பொதுவாக போரடிப்பதாக கருதப்படுவதுடன், தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இருப்பதுடன் தயாரிப்பதற்கு கடினமாக கருதப்படுகிறது. இவை அனைத்தும் சமைக்கும் முறை, பயன்படுத்ப்படும் பொருட்கள் மற்றும் உணவு வகைகளை பொருத்ததாகும் என நான் வலிமையாக நம்புகிறேன். இங்கு செய்து காண்பிக்கப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியமானவை, சுவையானவை மற்றும் தயாரிப்பதற்கு எளிதானவை. நீரிழிவைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமாகும்” என்றார்.

பல்வேறு நுகர்வோர் மற்றும் நோயாளிகள் இந்த நிகழ்ச்சியை பார்த்து வீட்டிலேயே எளிதாகத் தயாரிக்கக்கூடிய சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு வகைகள் பற்றித் தெரிந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...