கோவை மாவட்டம், மலையடிவாரப் பகுதியான காரமடை வனப்பகுதியில் வியாழனன்று மாலை மான் வேட்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு பேரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் என். சதீஷ் கூறுகையில், காரமடை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொள்கையில் அவர்களது தலைக்கவசத்தில் மானின் இறைச்சியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்.குமார் (41), கே.கார்த்திக் (24), கே.சந்திரன் (28) மற்றும் ஐ.லின்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மான் கறி கிலோ ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்றார்.

இதுகுறித்து, மாவட்ட வன அலுவலர் என். சதீஷ் கூறுகையில், காரமடை வனப்பகுதியில் சிலர் மான் வேட்டையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டது. அவர்களை பிடித்து சோதனை மேற்கொள்கையில் அவர்களது தலைக்கவசத்தில் மானின் இறைச்சியை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. தொடர்ந்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆர்.குமார் (41), கே.கார்த்திக் (24), கே.சந்திரன் (28) மற்றும் ஐ.லின்டன் (23) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த மான் கறி கிலோ ஒன்று சுமார் ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது" என்றார்.