கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையில் தொழிலதிபர் தவறவிட்ட 60 பவுன் தங்க நகைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் மாநகர காவல் ஆணையரிடம் ஒப்படைத்தார்.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். கடந்த 20 வருடங்களாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்றுகாலை சவாரி செல்லும் போது, முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தில் இருந்தவரின் பை ஒன்று தவறி விழுந்தததை கண்ட முனியப்பன் அந்த பையை எடுத்து பார்த்த போது அதனுள் தங்க நகைகள் மற்றும் தங்க காசுகள் இருந்துள்ளன.
இதனையடுத்து சக ஆட்டோ ஓட்டுநர்களிடன் கூறியுள்ளார். பின்னர் அந்த பையை எடுத்து சென்று மாநகர காவல் ஆணையாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் முனியப்பன் ஒப்படைத்தார்.
பையினுள் இருந்த நகையை மதிப்பீடு செய்த போது 60 பவுன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே நகையை தவறவிட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தநிலையில் அவரிடம் தவறவிட்ட நகைகளை போலீசார் ஒப்படைத்தனர்.
ஆட்டோ ஓடுநரின் நேர்மையை பாராட்டிய மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், அவரின் நேர்மைக்கு பரிசாக தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியைச் சேர்ந்தவர் முனியப்பன். கடந்த 20 வருடங்களாக அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இன்றுகாலை சவாரி செல்லும் போது, முன்னே சென்ற இரு சக்கர வாகனத்தில் இருந்தவரின் பை ஒன்று தவறி விழுந்தததை கண்ட முனியப்பன் அந்த பையை எடுத்து பார்த்த போது அதனுள் தங்க நகைகள் மற்றும் தங்க காசுகள் இருந்துள்ளன.
இதனையடுத்து சக ஆட்டோ ஓட்டுநர்களிடன் கூறியுள்ளார். பின்னர் அந்த பையை எடுத்து சென்று மாநகர காவல் ஆணையாளரிடம் ஆட்டோ ஓட்டுநர் முனியப்பன் ஒப்படைத்தார்.
பையினுள் இருந்த நகையை மதிப்பீடு செய்த போது 60 பவுன் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதனிடையே நகையை தவறவிட்டவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்தநிலையில் அவரிடம் தவறவிட்ட நகைகளை போலீசார் ஒப்படைத்தனர்.
ஆட்டோ ஓடுநரின் நேர்மையை பாராட்டிய மாநகர காவல் ஆணையாளர் அமல்ராஜ், அவரின் நேர்மைக்கு பரிசாக தனிப்பட்ட முறையில் ஆயிரம் ரூபாய் வழங்கி கவுரவித்தார்.