“இசைஞர் - 2017” இசைக்கருவிகள் இசைக்கும் போட்டி நாளை முதல் துவக்கம்!

இசைக் கருவிகளை இசைக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக “இசைஞர்-2017” எனும் போட்டிக்கு கோவை நன்னெறிக் கழகம் சார்பில் சரோஜினி நடராஜ் டிரஸ்ட் மற்றும் தி இந்து நாளிதழ் ஆகியன இணைந்து நடத்துகின்றன. கிக்கானி பள்ளி வளாகத்தில் உள்ள சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியத்தில் நடைபெற உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு நித்யஸ்ரீ மகாதேவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார்.

இப்போட்டியில் கலந்துகொள்ள கோவை, திருப்பூர் மற்றும் நிலகீரி மாவட்டங்களைச் சேர்ந்த 440 பேர் விண்ணப்பித்திருந்தார்கள். போட்டியாளர்களுக்கான தகுதிச் சுற்றுகள் இன்று (ஜூலை 29 - சனிக்கிழமை) காலை 9 மணி முதல் ஆரம்பமாகின்றன.

இறுதிச் சுற்று நாளை (ஜூலை 30 - ஞாயிற்றுகிழமை) மாலை 5:00 மணிக்கு நடைபெற இருக்கிறது. இப்போட்டிகளின் நடுவர்களாக அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகத்தின் இசைத்துறைத் தலைவர் ஜனக மாயாதேவி மற்றும் அவரது சக இசை ஆசிரியர்கள் செயல்பட இருக்கிறார்கள்.

பரிசளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சில்க்ஸ் இயக்குனர் கே.விநாயகம் மற்றும் பிரபல கர்நாடக சங்கீத பாடகி கலைமாமணி நித்யஸ்ரீ மகாதேவன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். பரிசளிப்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இசை நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை சென்னை சில்க்ஸ், ரேடியோ சிட்டி, சிம்ப்ளிசிட்டி, காட்ஸ்வில்லா ரிசார்ட், உடுமலை.காம், ஃபன் சிட்டி ஆகியவை இணைந்து நடத்துகின்றன. அனுமதி இலவசம். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...