புதுமைப் புகுத்தும் வேளான் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள்

தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நான்காவது நாளாக கிணத்துக்கடவு ஊராட்சியில் நடைபெற்று வருகிறது. கோதவாடி குளம் அவ்வூர் மக்களுக்கு நன்னீர் தேக்கியாகப் பயன்பட்டு வந்தது. உரிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், குளத்தைச் சுற்றி களைப் பயிர்களும், குப்பைகளும் அதிகளவில் காணப்பட்டன. ஊர் மக்களின் நலன் கருதி, தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித் திட்டமாணவர்கள் குளத்தைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். 



மற்றொரு மாணவர் குழு சட்டக்கல்புதூரில் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து, விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர். அப்பேரணியில் தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மது மற்றும் புகையிலைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

கல்வி நிலையம் என்பது மாணவர்களுக்கு கற்றல் மீது உள்ள ஆர்வத்தைத் தூண்டும் இடமாக அமைய வேண்டும் என்பதில்  முழுமையான நம்பிக்கைக் கொண்டுள்ளது தமிழ்நாடு வேளாண்மைப்  பல்கலைக்கழகம். அதன் அடிப்படையில் சொக்கனூரில் உள்ள அரசுப் பள்ளி கட்டிடத்தைச் செம்மைப் படுத்தும் விதமாக வெள்ளைப் பூச்சு அடிக்கப்பட்டது. 

நாளின் இறுதி நிகழ்வாக சொக்கனூர் பகுதியில், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பேராசிரியர்களின் வழிக்காட்டுதலுடன் காளான் வளர்ப்பு, காய்கறிகள் அறுவடை தொழில்நுட்பம், மண்புழு உரம் பயன்பாடு குறித்த சிறப்பு விளக்கவுரை விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் அளிக்கப்பட்டது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...