உக்கடம் பெரியகுளத்திற்கு வரும் தண்ணீரில் சீர்கேடு; வாய்க்காலில் நடப்பது என்ன?

கோவை, உக்கடம் பெரியகுளத்திற்கு பேரூர் அருகே உள்ள கோயமுத்தூர் தடுப்பணையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் பயணித்து நெய்யல் நீர் உக்கடம் பெரியகுளத்தை வந்து சேர வேண்டும். வாய்க்கால் கரையில் உள்ள மண் தடத்தை காரணம் காட்டி தனியார் கட்டுமான நிறுவனம் பெரிய அளவிலான கட்டுமானத்தை நடத்தி வருகிறது. இதற்கு உடந்தையாக அரசின் அனைத்து துறைகளும்செயல்பட்டு வாய்க்கால் சுருங்கவும் நீர் வரும் பாதை தடைபடவும் காரணமாக உள்ளன.



குறிப்பாக, பேரூர் அருகே உள்ள கோயமுத்தூர் தடுப்பணையில் இருந்து சுமார் 3.5 கிலோமீட்டர் வரையில் வாய்கால் ஓரம் நிலங்கள் ஆக்கிரமிப்பு செயல்பட்டு பொதுமக்கள் குடியேறி வருகின்றனர். தனியார் கட்டுமான நிறுவனம் பெரிய அளவிலான கட்டிடக் கழிவுகளை இங்கு கொட்டி வருகின்றன. இதனால், பிளாஸ்டிக் பொருட்களாலும், உபரி காங்ரீட்டு கலவைகளாலும் வாய்கால் சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது. இதனை மீறி வரும் இந்த கழிவுநீர் உக்கடம் பெரிய குளத்தில் கலக்கிறது. மேலும், சாலை விரிவாக்கத்திற்காக வாய்க்கால் துர் வார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.



முதலில் 2015-2016 நிதி ஆண்டில் பொதுப்பணி துறை திட்டத்தில் வாய்க்கால் மேலே 9 இலட்சம் மதிப்பில் சாலை அமைத்தது. இந்த ஆண்டு பொதுப்பணித் துறை நொய்யல் ஆறு குளங்கள் சீரமைக்க ஒதுக்கப்பட்ட ஒட்டு மொத்த தொகையே 23 லட்சம் தான் 2016-2017 நிதி ஆண்டில் மாநகராட்சி அதே சாலையை விரிவாக்கம் செய்து வாய்க்கால் துர்வார முடியாத அளவுக்கு தடுப்பு வேலி அமைத்துள்ளது.



ஆண்டுக்கு ஒருமுறை பொதுப்பணி துறைகள் ஒரு சாலையை போட வேண்டிய தேவை ஏற்பட்ட காரணம் என்ன? வாய்க்கால் முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் புதர் மூடி உள்ளது. இதனை தூர்வார முடியாத அளவுக்கு தடுப்புவேலி அமைந்துள்ளது. கட்டுமான நிறுவனத்தின் உபரி காங்ரீட்டு கலவையை வாய்க்கால் நடுவே கொட்டி உள்ளனர். கடும் வறட்சி மற்றும் நீர் தட்டுப்பாட்டால் மக்கள் தன்னார்வ அமைப்புகள் குளம் குட்டைகளை தூர் வாரி வரும் நிலையில் அரசு துறையே இது போன்ற அநியாயத்துக்கு துணை போவது மிகவும் கண்டனத்துக்குறியது.உடனடியாக வாய்க்கால் கரையில் உள்ள தடுப்புகளை அகற்றி உடனடியாக வாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்கவேண்டும்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...