அத்திக்கடவு- அவினாசி திட்டம்: போராடிய மக்களுக்கு பயனற்றதாக மாற்றும் முதலமைச்சரின் புதிய திட்டம்

அத்திக்கடவு - அவினாசி திட்டத்தினை அமல்படுத்தக் கோரி கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதி மக்கள் பல்வேறு வருடங்களாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சமீபத்தில் தமிழக முதலமைச்சர் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றி அறிவித்திருப்பது போராடிவரும் மக்கள் மற்றும் தன்னார்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சமீபத்தில் மாநில சட்டசபைக் கூட்டத் தொடரின் போது அத்திக்கடவு- அவினாசி திட்டம் விரைவில் துவங்கப்படும் என அறிவித்தார். இதில், இத்திட்டம் 2017 டிசம்பரில் தொடங்கி அடுத்த 30 மாதங்களில் முடிவடையும் எனவும் அறிவித்தார்.

பல ஆண்டுகளாக இந்த திட்டத்தை எதிர்பார்த்து காத்திருந்த மக்கள் முதலமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பு அளித்தனர். இருப்பினும், முதலமைச்சர் இத்திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளை மாற்றி அறிவித்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. 

எதன் அடிப்படையில் இத்திட்டத்திற்கான பாதைகளை மாற்றினார்கள் என்ற சந்தேகம் இருந்தாலும் கோவையின் அன்னூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிராமங்களை இதில் இணைக்காமல் போனது அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

அவினாசி - அத்திக்கடவு திட்டத்தில் மூன்று நீர் உந்து நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. அவை அன்னூர், காலிங்கராயன் பாளையம் மற்றும் ஈராடு பெருந்துறையில் அமைக்கப்படவுள்ளன. இந்த மூன்று நீர் உந்து நிலையங்கள் இடையே பல்வேறு கிராமங்களில் நீர் பயணிக்கும். அதில் இருந்து மின்சாரம் எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இவ்வாறு செல்லும் நீரானது அன்னூருக்கு உட்பட்ட பல்வேறு கிராமப்பகுதிகளுக்கு செல்லாமலேயே திட்டம் உள்ளதால் அப்பகுதி மக்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட அன்னூர் பகுதி மக்களின் நீண்ட கால போராட்டங்களுக்கு இது பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதால் மீண்டும் பரிசீலனை செய்து திட்டத்தினை மாற்றி அமைக்க வேண்டும் என்கிறார் பி.கே.செல்வராஜ் எனும் சமூக ஆர்வலர்.

"அவினாசி - அத்திக்கடவு திட்டத்தினை எதிர்பார்த்து இருந்த கிராமவாசிகளுக்கு நீர் வழங்கப்படாமல் திட்டத்தை மாற்றியது மிகப்பெரும் அநீதியாகும். இத்திட்டத்தினை மாற்றி அமைத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மூலமாக தமிழக முதலமைச்சருக்கு எடுத்துரைக்க உள்ளதாகவும் பி.கே.செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...