அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் கலந்தாய்வு சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2017-க்கான கலந்தாய்வு சேர்க்கையையொட்டி மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்ததாவது:-

கோவை மாவட்டத்தின் அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் (மகளிர்), அரசினர் தொழிற் பயிற்சி நிலையம் ஆனைகட்டி மற்றும் சில தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களின் அரசு ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்களுக்கு ஆகஸ்ட் - 2017 இரண்டாம் கட்ட கலந்தாய்வு சேர்க்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இதற்கான கடைசி தேதி 10.08.2017 ஆகும். 

எனவே தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விரும்பும் மாணவ, மாணவியர் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் 10.08.2017 மாலை 5 மணிக்குள் பதிவு செய்து பயன்பெற தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பதாரர்களின் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...