ஜிஎஸ்டி வரி உயர்வு, வளர்மதி கைது, நீட் விவகாரம் உட்பட மத்திய அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 750-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை மாநகரத்திற்கு உட்பட்ட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், கோவையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 750-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தை வஞ்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோவை மாநகரத்திற்கு உட்பட்ட 13 இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்ய வேண்டும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதேபோல், கோவையின் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட 750-க்கும் மேற்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.