நீலகிரி மாவட்டம் உலிக்கல் பஞ்சாயத்து உட்பட்ட பகுதிகளில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட உலிக்கல், திருவள்ளுவர் நகர், உலிக்கல் ஹட்டி ஆகிய பகுதிகளுக்கு பென்காம் எஸ்டேட் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலிக்கல் அருகே உள்ள கழிப்பிடம் அருகே குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனை உலிக்கல் பஞ்சாயத்தில் பணிபுரியும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணியளர்கள் முறையாக பராமரிக்காததால் அந்த கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து குழாய் வழியாக வருகின்றது.
இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று உலிக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அடுத்துள்ள உலிக்கல் பஞ்சாயத்துக்கு உட்பட உலிக்கல், திருவள்ளுவர் நகர், உலிக்கல் ஹட்டி ஆகிய பகுதிகளுக்கு பென்காம் எஸ்டேட் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலிக்கல் அருகே உள்ள கழிப்பிடம் அருகே குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனை உலிக்கல் பஞ்சாயத்தில் பணிபுரியும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணியளர்கள் முறையாக பராமரிக்காததால் அந்த கழிப்பிடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடிநீருடன் கலந்து குழாய் வழியாக வருகின்றது.
இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று உலிக்கல் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு காலி குடங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.