ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” அனுசரிப்பு

கோவை வெரைட்டி ஹால் சாலையில் அமைந்துள்ள தனியார் விடுதியில் கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் “பெருநாள் சந்திப்பு” நிகழ்ச்சி நடைபெற்றது.



ஒவ்வோர் வருடமும் ரமளான் பெருநாள் முடிந்த பின் மாநகரின் அரசு உயர் அதிகாரிகள், கல்வியாளர்கள், சான்றோர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சேவை அமைப்பினர்கள் என பலதரப்பினரையும் ஒருங்கிணைத்து அவர்களுடன் நல்லிணக்கம் பேணும் வகையில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியினை முஹம்மது முஸ்தபா துவக்கி வைத்தார். இந்த பெருநாள் சந்திப்பின் நோக்கம் மற்றும் ஜமாஅத்தின் பணிகள் குறித்து கோவை மாநகர ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் தலைவர் ஜனாப். கே.ஏ.சையது இப்ராஹிம் உரையாற்றினார்.



தொடர்ந்து, சமூகங்களுக்கிடையே புரிதல்கள் மேம்படவேண்டும் என்றும், இத்தகைய சந்திப்புகள் வருடம்தோறும் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்றும் கோவை கே.ஜி. மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் பக்தவத்சலம் வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், விரைவு அதிரடிப்படை 105-வது படைப்பிரிவின் உதவி கமாண்டன்ட் சுந்தரக்குமார், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பதிவாளர் அனந்த கிருஷ்ணன், பாரதியார் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் துறைத்தலைவர்கள், அருட்தந்தை ஜான் பீட்டர், இயக்குனர், திவ்யோதயா, ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு துறையினரும் பங்கேற்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...