அதிமுகவினர் நடத்தும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாறுவதாக -கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றச்சாட்டு

சசிகலா, தினகரன், எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பி.எஸ் என அதிமுகவினர் நடத்தி வரும் நாடகத்தால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்து வருவதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஜி.எஸ்.டியை நடைமுறைப்படுத்த மத்திய அரசு குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது கால அவகாசம் அளிக்க வேண்டும் என வலியுறித்தினார். ஒரு மொழியை விரும்பி படிப்பதை தடுப்பது எப்படி தவறோ அதைப் போலவே ஒரு மொழியை மற்ற மாநில மக்களின் மீது திணிப்பதும் தவறு எனக்கூறிய அவர் கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்திக்க பிரதமர் முன்வர வேண்டும் எனவும் அவர் வலியுறித்தினார். ஊழலில்லா தமிழகத்தை உருவாக்க தங்கள் கட்சி எப்போதும் துணை நிற்கும் என தெரிவித்தவர். நடிகர் கமலஹாசனின் கருத்துக்களை ஊழலுக்கு எதிரான கருத்துக்களாக மட்டுமே பார்க்க வேண்டும் என தெரிவித்தார். 

ஆனால், கமலின் கருத்துக்களுக்கு பதில் கருத்து சொல்லி பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப தமிழக அமைச்சர்கள் முயல்வதாக அவர் குற்றம்சாட்டினார். நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக முன்பே தமிழக அரசு தெளிவுபடுத்தியிருக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய தீர்வை குடியரசு தலைவர் மூலமாக மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர வேண்டும் எனவும் தெரிவித்தார். கோவையில் மெட்ரோ இரயில் திட்டம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தமிழக அரசின் இந்த திட்டத்தை வரவேற்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...