கோவையில் துவங்கியது 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா

கொடிசியா நடத்தும் 3-ஆவது கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நேற்று தொடங்கியது. தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கத்துடன் (பபாசி) இணைந்து, கொடிசியா கடந்த 2 ஆண்டுகளாக புத்தகத் திருவிழாவை நடத்தி வருகிறது. இந்நிலையில், 3-ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா நேற்று கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாத்தில் துவங்கியது. இதனை அகில இந்திய புத்தக பதிப்பாளர் சங்க தலைவர் பல்தேவ்பாய் சர்மா, எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 



இந்தக் கண்காட்சியில், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளம், கர்நாடகம், புது தில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 170 பதிப்பாளர்கள், 265 அரங்குகளில் புத்தகங்களைக் காட்சிப்படுத்தியுள்ளனர். இதில், தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில், பல்வேறு தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்தக் கண்காட்சி ஜூலை 30-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கண்காட்சிக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்கள் நேரமாக உள்ளது.



நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பல்தேவ்பாய் சர்மா பேசுகையில், ''புத்தகங்களை மதித்து போற்றிய யாரும், தோல்வியுற்றதாக இல்லை. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் புத்தகங்களை விற்பனை செய்ய, இதுபோன்ற கண்காட்சிகள், பெரிதும் உதவியாக இருக்கும்,'' என்றார். கொடிசியா முன்னாள் தலைவர் வரதராஜன் பேசுகையில், ''மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்தால் மட்டுமே, தொழில்கள் நிலைக்க முடியும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். இதை அடிப்படையாக கொண்டு தான், புத்தக திருவிழா நடத்தப்படுகிறது,'' என்றார்.



பின்னர், கோவை புத்தக கண்காட்சி சார்பில், எழுத்தாளர் ஜெயமோகனுக்கு, படைப்பாளருக்கான "வாழ்நாள் சாதனையாளர் விருது" வழங்கப்பட்டது. இறுதியில் கொடிசியா துணைத்தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.



Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...