கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை, வால்பாறையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.

இந்நிலையில், வால்பாறை குடியிறுப்பு பகுதிகளில் சிறுத்தை புலி இரவு நேரங்களில் தொடர்ந்து நடமாடிவருவதாக அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வனத்துறையிடம் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை மார்கெட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் சிறுத்தை புலி, ஆட்டை கடித்து கொன்றது. இதைக்கண்ட மணிகண்டன் கூச்சலிடவே சிறுத்தை புலி அங்கிருந்து தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து தப்பிச் சென்றது.

இதனைத்தொடர்ந்து, சிறுத்தைப் புலிகளால் வால்பாறை குடியிருப்பு பகுதியில் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், வால்பாறை குடியிறுப்பு பகுதிகளில் சிறுத்தை புலி இரவு நேரங்களில் தொடர்ந்து நடமாடிவருவதாக அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வனத்துறையிடம் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை மார்கெட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் சிறுத்தை புலி, ஆட்டை கடித்து கொன்றது. இதைக்கண்ட மணிகண்டன் கூச்சலிடவே சிறுத்தை புலி அங்கிருந்து தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து தப்பிச் சென்றது.

இதனைத்தொடர்ந்து, சிறுத்தைப் புலிகளால் வால்பாறை குடியிருப்பு பகுதியில் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.