வால்பாறை குடியிருப்பு பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம்- பொதுமக்கள் அச்சம்

கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரக பகுதிக்குட்பட்ட வனப்பகுதிகளில் யானை, மான், புலி, சிறுத்தைப்புலி, காட்டெருமை, முள்ளம்பன்றி உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன. இவை, வால்பாறையில் அமைந்துள்ள தேயிலை தோட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் இரை தேடி சுற்றித்திரிகின்றன.



இந்நிலையில், வால்பாறை குடியிறுப்பு பகுதிகளில் சிறுத்தை புலி இரவு நேரங்களில் தொடர்ந்து நடமாடிவருவதாக அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வனத்துறையிடம் புகார் அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வால்பாறை மார்கெட் பகுதியில் மணிகண்டன் என்பவரது வீட்டின் அருகில் சிறுத்தை புலி, ஆட்டை கடித்து கொன்றது. இதைக்கண்ட மணிகண்டன் கூச்சலிடவே சிறுத்தை புலி அங்கிருந்து தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்து தப்பிச் சென்றது. 



இதனைத்தொடர்ந்து, சிறுத்தைப் புலிகளால் வால்பாறை குடியிருப்பு பகுதியில் மனித உயிரிழப்புகள் ஏற்படும் முன் வனத்துறையினர் கூண்டு வைத்து அதனை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...