மது பழக்கத்தில் இருந்து விடுபட கேஎம்சிஎச் மருத்துவமனையில் புதிய நவீன மருத்துவம்

இந்தியாவில் முதன் முறையாக கேஎம்சிஎச் மருத்துவமனையின் மருத்துவர்கள் மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஸ் மேக்கரை மூளையின் ஆழ்ந்த பகுதிகளுடன் தொடர்புகொள்ள பொருத்தினார்கள். இதற்கு ஆழ் மூளை தூண்டுதல் என்று பெயர். நடுக்குவாதம் முற்றிய நிலையில் உள்ளவர்களுக்கும், சிலவகையான வலிப்பு நோய்கள் மற்றும் பொதுவான நரம்பியல் இயக்கக் கோளாறு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் இந்த சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த 55 வயது நபர் 2013 ஆம் ஆண்டிலிருந்தே மதுப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அதில் இருந்து மீள்வதற்கு கோவை கேஎம்சிஎச் மருத்துவமனை வந்த அவரை மருத்துவர் அருள் செல்வன் பரிசோதனை மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து, அவருக்கு புதிய நவீன முறையிலான சிகிச்சையை மேற்கொள்ள கேஎம்சிஎச் மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அதன்படி, நோயாளியின் மூளையில் ஆழ்ந்த பகுதியில் ஒரு மிகச்சிறிய மின்முனை இணைக்கப்பட்ட ஒரு பேஷ் மேக்கர் பொருத்தப்பட்டது. இந்த பேஸ்மேக்கரிலிருந்து தொடர்ந்து மின்சார சமிக்ஞைக்கள் அனுப்பப்படுகின்றன. இதனால், அவர் முற்றிலும் குணமடைந்தார்.



இதுகுறித்து, கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல ஜி. பழனிசாமி கூறுகையில், புதுமையான மற்றும் புதிய சிகிக்சை முறைகளை மேற்கொள்வதிலும், அவற்றின் பயன்களை நிரூபிப்பதிலும் கேஎம்சிஎச் மருத்துவமனை தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிறந்த மருத்துவ தொழில்நுட்பமும் நவீன வசதிகளும் இருக்கின்றன. நோயாளி மதுப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்ததற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...