கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பரும மழை தீவிரமடைந்துள்ளது. தற்போது, நேற்று கோவை குற்றாலத்தின் நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கன மழையினால் கோவைக் குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதித்து வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
மேலும், நொய்யலின் நீர்பிடிப்பு பகுதியான கோவைக் குற்றாலத்தில் கன மழை தொடர்ந்தால் நாளையும் அங்கு குளிக்க தடை விதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நொய்யலின் நீர்பிடிப்பு பகுதியான கோவைக் குற்றாலத்தில் கன மழை தொடர்ந்தால் நாளையும் அங்கு குளிக்க தடை விதிக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.