ராஜ விதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவக்கம்


கோவை ராஜவீதியில் உள்ள விஜயா பதிப்பகத்தில் புத்தக திருவிழா இன்று துவங்கியது. இதனை கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேரூர் மருதாசல அடிகளார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



முதல் விற்பனையை துவக்கி வைத்து கோவை மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், புத்தக வாசிப்பு என்பது அனைவரிடமும் உருவாக வேண்டும். இது மாதிரியான புத்தக திருவிழாக்களால் புத்தக வாசிப்பு மக்களிடையே அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

சமுக வலைதளங்களின் மூலம் வாசிக்கப்படுவது மனதில் தங்குவது இல்லை. புத்தகமாக படிக்கும்போது மன பயிற்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு உதவும் என்றார்.

இன்று துவங்கிய இந்த புத்தக திருவிழா வரும் ஜூலை 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் ஆன்மீகம், அறிவியல், குழந்தைகள் இலக்கியம் உள்ளிட்ட சில புத்தகங்களுக்கு 30 சதவிகிதம் வரை தள்ளுபடி உள்ளதாக விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் தெரிவித்தார். பல்வேறு தரப்பட்ட நூல்கள் இக்கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த புத்தக கண்காட்சி கோவை மக்களின் புத்தக வாசிப்புக்கு கிடைத்த விழாவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...