பொள்ளாச்சியல் செயல்பட்டு வரும் டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் ஜூலை 20 முதல் மூன்று நாட்களுக்கு "புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் நிலையான சூழல்" என்னும் சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, கல்லூரி வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்புடைய திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.

"நீடித்த சுற்றுச்சூழல்" கருப்பொருளின் கீழ் மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக, ஜப்பானிய "மியா-வாகி" முறையைப் பெற்ற நகர்ப்புற வனப்பகுதியை உருவாக்கியுள்ளது. அதன்படி 1600 சதுர அடி அளவிலான பைலோட்டில் 120 வகையான தாவரங்கள் நடப்பட்டுள்ளன. இந்த மாதிரி மரப்பண்ணை பத்து ஆண்டுகளில் இயற்கையான காடுகளாக மாறும். இதுகுறித்து மேலும் தகவலுக்கு இதன் ஒருங்கிணைப்பாளர் பசுமைதேசம் ராஜேந்திரன் அவர்களை 98422 75239 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
