பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தினர் இன்று விநாயகர் வேடமணிந்து வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மின்சார இரயில் வசதி அமைத்துத் தர வலியுறுத்தியும், காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியினை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விநாயகர் வேடமணிந்து வந்த சக்தி சேனா இந்து இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறில்லாத இடங்களில் விழா நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மின்சார இரயில் வசதி அமைத்துத் தர வலியுறுத்தியும், காந்திபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும். உக்கடம் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியினை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விநாயகர் வேடமணிந்து வந்த சக்தி சேனா இந்து இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

மேலும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பொதுமக்களுக்கு போக்குவரத்து இடையூறில்லாத இடங்களில் விழா நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.