துணை குடியரசு தலைவர் தேர்தலில் கோபால கிருஷ்ண காந்திக்கு வாக்களிக்க வேண்டுமென மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவைக்கு வருகை தந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென அதிமுக எடுக்கும் முடிவு அவர்களது உரிமை என தெரிவித்தார். ஆனால் துணை குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் கட்சியை சாராதவரும், காந்தி, ராஜாஜி பேரனுமான கோபால கிருஷ்ணகாந்தியை பாஜக அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிமுக எம்.பிக்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமின்றி, முழு தகுதி படைத்தவர் என்ற முறையில் வாக்களிக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள் என வைகோ தெரிவித்தார்.
கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோவைக்கு வருகை தந்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் குமரி ஆனந்தன் போராட்டம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.
மேலும், குடியரசு தலைவர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென அதிமுக எடுக்கும் முடிவு அவர்களது உரிமை என தெரிவித்தார். ஆனால் துணை குடியரசு தலைவர் தேர்தலில் அரசியல் கட்சியை சாராதவரும், காந்தி, ராஜாஜி பேரனுமான கோபால கிருஷ்ணகாந்தியை பாஜக அணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழக அதிமுக எம்.பிக்கள் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதற்காக மட்டுமின்றி, முழு தகுதி படைத்தவர் என்ற முறையில் வாக்களிக்க வேண்டுமென்பது எனது வேண்டுகோள் என வைகோ தெரிவித்தார்.