கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு வெற்றி- பொள்ளாச்சி- கோவை-க்கு ரயில் சேவை துவங்கம்


கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கோவை- பொள்ளாச்சி வரை செல்லும் அகல ரயில் பாதை பாசஞ்ஜர் ரயில் இன்று மதியம் 1.35 மணிக்கு துவங்கியது.

கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துகடவு வழியாக பொள்ளாச்சி வரை செல்லம் பாசஞ்ர் ரயில் இன்று தனது சேவையினை துவங்கியது. கோவையிலிருந்து போத்தனூர் வரை ஏற்கனவே அகல ரயில் பாதை உள்ள நிலையில் போத்தனூரிலிருந்து பொள்ளாச்சி வரை அகல ரயில் பாதையாக மாற்ற பல வருடங்கள் கடந்த நிலையில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை வந்த போது விரைவில் சேவை துவங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து, பணிகள் நிறைவடைந்த நிலையில் சோதனை ஓட்டம் முடிந்து பயணிகளுக்கான ரயில் சேவை இன்று துவங்கியது. 

தினமும் மதியம் 1.35-க்கு கோவையிலிருந்து, போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக பொள்ளாச்சி செல்லும் இந்த ரயில் ஒரு மணி நேரத்தில் பொள்ளாச்சி சென்றடைகிறது. பொள்ளாச்சியில் இருந்து மதியம் 3.50-க்கு புறப்பட்டு மாலை 4.45 மணிக்கு கோவை வந்தடைகிறது.

இதற்கான கட்டணம் 15 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும், முதல் 6 மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் இயங்கும் என கோவை ரயில் நிலைய மேலாளர் சின்னராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து பயணிகள் கூறும்போது, மக்களின் நீண்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த கட்டணம் என்பதால் பலரும் பயனடைவார்கள் என தெரிவித்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...