நீட் தேர்வு விவகாரத்தில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஈழப்பிரச்சினைக்காக போராடிய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போட்டு இருப்பது கண்டிக்கதக்கது எனவும், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
மேலும், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தவர் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பத்காகவுன் இது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசின் போக்கு கவலை அளிப்பதாக தெரிவித்தவர். மேலும், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பினை கூட தமிழக அரசு பதிவு செய்யாமல் இருக்கின்றது என குற்றம் சாட்டினார்.

கோவையில் நடைபெற்ற மாவட்ட மதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, ஈழப்பிரச்சினைக்காக போராடிய திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம் போட்டு இருப்பது கண்டிக்கதக்கது எனவும், சசிகலாவிற்கு சிறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.
மேலும், நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்தவர் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு ஒதுக்கீட்டை உயர்நீதிமன்றம் நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிப்பத்காகவுன் இது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் என தெரிவித்தார்.
மேலும், காவிரி விவகாரம் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகளிலும் மத்திய அரசின் போக்கு கவலை அளிப்பதாக தெரிவித்தவர். மேலும், மீத்தேன் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்னவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆனால் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பினை கூட தமிழக அரசு பதிவு செய்யாமல் இருக்கின்றது என குற்றம் சாட்டினார்.