ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துப்புரவு பணியாளர்கள் தர்ணா

குறித்த தேதியில் ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாநகராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதந்தோறும் ஏழாம் தேதி ஊதியமானது வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த மாதம் 13-ஆம் தேதியான போதும் ஊதியம் வழங்கவில்லை என குற்றம்சாட்டி 300-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த சில மாதங்களாக ஒப்பந்த பணியாளர்களுக்கு குறித்த நேரத்தில் ஊதியம் வழங்காமல் இழுத்தடிப்பதாகவும், ஒவ்வொரு முறையும் போராடியே ஊதியம் பெற வேண்டி இருப்பதாக தெரிவித்தனர். குறித்த நேரத்தில் ஊதிகம் கிடைக்காததால் பல்வேறு பிரச்சனைகளை மாத மாதம் சந்திப்பதாக தெரிவித்தவர்கள், மாதம் தோறும் 5-ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர்.

மேலும் எந்த ஒரு பணி பலனும் இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும் மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினர். தங்களது கோரிக்கை தொடர்பாக பல முறை மாநகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த முறை தங்கள் கோரிக்கை நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மாநகர சுகாதார துறை அதிகாரி, இம்மாதத்திற்கான ஊதியம் இன்று மாலைக்குள் வழங்கப்படும் எனவும், இனி வரும் காலங்களில் குறித்த தேதியில் ஊதியம் வழங்கப்படும் என உறுதி அளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒரு தரப்பினர் கலைந்து சென்றனர். ஆனால் மற்றொரு தரப்பினர் ஊதியம் வரும் வரை போராட்டம் தொடரும் எனக் கூறி தங்களது தர்ணா போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.

Newsletter

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...