நீலகிரி மாவட்டம், குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 5 யானைகள் இன்று முகாமிட்டுள்ளது. இதனால், அந்த சாலை வழியாக போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குன்னூர் வனசரகர் பெரியசாமி தலைமையில் அப்பகுதியில் இருந்து யானைக் கூட்டத்தினை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதற்காக நவீன யானை விரட்டும் வாகனம் உள்ளிட்டவையும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் குன்னூர் வனசரகர் பெரியசாமி தலைமையில் அப்பகுதியில் இருந்து யானைக் கூட்டத்தினை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதற்காக நவீன யானை விரட்டும் வாகனம் உள்ளிட்டவையும் அப்பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளன.