வாகன ஓட்டிகளுக்கு வலுக்கும் கட்டுப்பாடுகள்...!

விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறையைச் சார்ந்த அனைத்து செயலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கும் கோவை மாவட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, சாலைப் பாதுகாப்பு குழுவினரால் நிர்ணயிக்கப்பட் வேக அளவை விட அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சமிக்கையை மதிக்காமல் வாகனத்தை இயக்குதல், சரக்கு வாகனத்தில் நிர்ணயிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதல் சுமையை ஏற்றிச் செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லுதல், மதுபோதையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறி செயல்படும் வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை போக்குவரத்து ஆணையர், கோவையில் விபத்துக்களை குறைக்கும் பொருட்டு கீழ்க்கண்ட இடங்களில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளார்.

  • அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து அவற்றை சரி செய்தல்.
  • தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியினை விபத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு முறையாக வழங்குதல்.
  • பொது மக்களிடம் சாலைப் பாதுகாப்பு தொடர்பாக அதிக விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
  • காவல்துறை மற்றும் போக்குவரத்துத் துறை மூலமாக செயலாக்க பணியினை தீவிரப்படுத்துதல் உள்ளிட்டவை அறிவுறுத்தப்பட்டுள்ளன.


அதன்படி, இன்றைய தினம் முதற்கட்டமாக காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம் மற்றும் உக்கடம் பேருந்து நிலையம் ஆகிய இரு இடங்களிலும் இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்படும் என கோவை வட்டார போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...