கோவை மாவட்டம், துடியலூர் பகுதியில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையின் துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளம் உள்ளது. இங்கு நேற்று கேரளாவில் இருந்து வந்த மூன்று பேர் வழிதவறி உள்ளே நுழைந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த சிஆர்பிஎப் படை வீரர்கள் இவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது இவர்கள், மலப்புரத்தினைச் சேர்ந்த பனிஸ் (21), அர்ஷத் (20) மற்றும் எர்ணாகுளத்தினை சேர்ந்த தாமஸ் (20) என்பது தெரியவந்துள்ளது. வழிதவறி இங்கே வந்துவிட்டோம் என விளக்கம் அளித்த நிலையிலும் இவர்கள் மூவரும் மாவோயிஸ்ட் அமைப்பினைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வழி தவறி நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.
இருப்பினும், பாதுகாப்புப் படைத் தளத்தில் நுழைந்தமைக்காக அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அப்போது இவர்கள், மலப்புரத்தினைச் சேர்ந்த பனிஸ் (21), அர்ஷத் (20) மற்றும் எர்ணாகுளத்தினை சேர்ந்த தாமஸ் (20) என்பது தெரியவந்துள்ளது. வழிதவறி இங்கே வந்துவிட்டோம் என விளக்கம் அளித்த நிலையிலும் இவர்கள் மூவரும் மாவோயிஸ்ட் அமைப்பினைச் சேர்ந்தவர்களா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து, அவர்களை துடியலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில், மூவரிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, அவர்கள் சிஆர்பிஎப் துப்பாக்கி சுடும் பயிற்சி தளத்தில் வழி தவறி நுழைந்தது உறுதிசெய்யப்பட்டது.
இருப்பினும், பாதுகாப்புப் படைத் தளத்தில் நுழைந்தமைக்காக அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.