கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆட்டோ மோட்டிவ் மற்றும் வாகனங்களுக்கான உதிரிபாகங்கள் உற்பத்தி தொழிற்சாலை நிறுவனமான பிரிக்கால் நிறுவனத்தில் தொழிலாளர்கள் மேற்கொண்டுள்ள போராட்டம் தொடருமேயானால் வாடிக்கையாளர்கள் சேவையை கருத்தில் கொண்டு கோவையில் பிரிக்கால் நிறுவனம் மூடும் சூழல் ஏற்படும் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனம் கடந்த 1982 ஆம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்டது. சர்வதேச அளவில் இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் மற்றும் இஞ்சினியரிங் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் போது பிரிக்கால் தொழிலாளர்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி தன்னிச்சையாக வேலைக்கு விடுமுறை எடுத்ததாக கூறி சுமார் 809 பேருக்கு எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனைக்கண்டித்து, அந்நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக இருதரப்பிலும் முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரிக்கால் நிறுவனத்தில் பிரச்சனைகள் தொடர்ந்தால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கோவை பிரிக்கால் யூனிட்டை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு 45 ஆண்டுகளாக இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தொழிற்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனம் கடந்த 1982 ஆம் ஆண்டு கோவையில் துவங்கப்பட்டது. சர்வதேச அளவில் இருசக்கர, நான்கு சக்கர வாகன உதிரிபாகங்கள் மற்றும் இஞ்சினியரிங் பாகங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றுமதி செய்து வரும் இந்நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தின் போது பிரிக்கால் தொழிலாளர்கள் எவ்வித முன் அறிவிப்புமின்றி தன்னிச்சையாக வேலைக்கு விடுமுறை எடுத்ததாக கூறி சுமார் 809 பேருக்கு எட்டு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டது. இதனைக்கண்டித்து, அந்நிறுவன தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்பிரச்சனை தொடர்பாக நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்படுவதாக இருதரப்பிலும் முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் இன்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விக்ரம் மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், பிரிக்கால் நிறுவனத்தில் பிரச்சனைகள் தொடர்ந்தால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி கோவை பிரிக்கால் யூனிட்டை இடமாற்றம் செய்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தார்.
கோவையை தலைமையிடமாகக் கொண்டு 45 ஆண்டுகளாக இந்தியா மட்டுமல்லாது பல நாடுகளில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டு வரும் பிரிக்கால் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு தொழிற்துறையினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.