நிர்மலா கலைக் கல்லூரியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் முகாம் துவக்கம்

கோவை மாவட்டம் நிர்மலா அறிவியல் கலைக் கல்லூரியில் இன்று (ஜூலை 6) வாக்காளர் பட்டியலில் 18 வயது முதல் 21 வயது நிரம்பிய கல்லூரி மாணவ, மாணவிகள் அனைவரையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் இம்முகாமினை துவக்கி வைத்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-



இந்திய தேர்தல் ஆணையம் தகுதி வாய்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் அதிகளவில் சேர்த்தல் மற்றும் பிழைகளை நீக்கும் பணிகளை கடந்த ஜூலை 1-ஆம் தேதியிலிருந்து ஜூலை 31-ஆம் தேதி வரை சிறப்புப்பணி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதனடிப்படையில் இந்த சிறப்புப்பணியை அனைத்து மாநிலங்களிலும் தொடங்கி “எந்த ஒரு வாக்காளரும் விடுப்பட்டுவிடக் கூடாது” என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் கருப்பொருளுக்கிணங்க அதிகளவில் இளைய வாக்காளர்களை குறிப்பாக 18-21 வயதுக் குழுமத்ததைச்சார்ந்த வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க தற்போது நடைபெறும் தொடர் திருத்தக் காலத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிடப்பட்டுள்ளது.

இம் மாதம் 1-ஆம் தேதியிலிருந்து 31-ஆம் தேதி வரை நடைபெறும் இச்சிறப்புப்பணியின்போது வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவுலகங்களில் படிவங்ளைச் சமர்ப்பிக்கலாம். அஞ்சல் மூலமும் படிவங்களை அனுப்பலாம். www.electons.tn.gov.in  என்ற இணையதளத்தின் மூலமும், இ-சேவை மையங்களின் மூலமும் இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்புப்பணியில் 09.07.2017 மற்றும் 23.07.2017 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகளில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குசாவடி நிலை அலுவலர்கள் அமர்ந்து நிரப்பப்பட படிவங்களை பெறுவர்.

இச்சிறப்புப்பணியின்போது, இறந்த வாக்காளர்களின் பெயர்களை பட்டியளிலிருந்து நீக்கும் பணியும் நடைபெறவுள்ளது. இறப்புப்பதிவு செய்யப்பட்ட விவரங்கள் உள்ளாட்சி அலுவலகங்களிலிருந்து பெறப்பட்டு அதனடிப்படையில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் பட்டியல்களிலிருந்து  இச்சிறப்புப்பணியின்போது நீக்கப்படும். இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ராஜ்குமார், மாநகராட்சி உதவி ஆணையர்கள் ரவிக்குமார், அண்ணாதுரை மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...