டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ள கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சியில், மழைகாலம் துவங்கி விட்ட காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் தடுப்புப் பணிகள் மண்டல வாரியாக தீவிர கண்காணிப்புடன் சிறப்பு கவனம் செலுத்த மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

மாநகராட்சியின் அனைத்து பகுதிகளிலும் நீர்தேக்க தொட்டிகளில் அபேட் மருந்து ஊற்றுதல், தேவையற்ற பொருட்களை அகற்றுதல் (தேவையற்ற பழைய டயர்கள், உபயோகமற்ற மண் பாண்டங்கள், குடங்கள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள்) ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்தவும், வீட்டை சுற்றியும், மாடியிலும் போட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. வீடுகளில் உள்ள பிரிஜ், அழகுக்காக வளர்க்கப்படும் பூந்தொட்டிச் செடிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரினால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாக வாய்ப்புகள் உள்ளது. 

எனவே, அவற்றை அவ்வப்போது தேவைக்கேற்ப தூய்மை செய்ய அல்லது குறைந்தபட்சம் வாரம் ஒருமுறை தூய்மை செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும், வீடு வீடாக சென்று புகை மருந்து அடிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. காய்ச்சல் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குடிதண்ணீரில் குளோரின் அளவு சரியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும் மாநகர பொறியாளருக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக இன்று மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி தெற்கு மண்டலம், வார்டு-97, பிள்ளையார்புரம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் டெங்கு தடுப்பு நடவடிக்கைள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் குறித்து எடுத்துரைத்தார். 

மாநகராட்சியில் பணிபுரியும் 65 கொசு ஒழிப்பு பணியாளர்கள், கிருஷ்ணா கல்லூரி அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் 100 பேர், கொசு ஒழிப்பு பணிகள், விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்குதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். துண்டு பிரசுரங்கள் ஏறத்தாழ 1000 வீடுகளுக்கு மேல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெங்கு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கல்லூரி மாணவர்களை ஈடுபடுத்தி தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

துணை ஆணையர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையாளர் ரவி, மாநகராட்சி அலுவலர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் கிருஷ்ணா கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...