கடந்த 3-ம் தேதி தமிழக காவல் துறை அதிகாரிகள் 46 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பணியாற்ற வந்த ரம்யபாரதி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து, கோவை மாநகரில் தலைமையக காவல் துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோவை எனக்கு முன்னதாகவே நன்கு தெரிந்த மாவட்டம். அதனால், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவேன். மேலும், அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்' இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, கோவை மாநகரில் தலைமையக காவல் துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டார். இன்று அவர் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோப்புகளில் கையொப்பமிட்டு பதவியேற்றுக்கொண்டார். காவல்துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தொடர்ந்து, மாவட்ட கண்காணிப்பாளர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், 'கோவை மாவட்ட கண்காணிப்பாளராக பொறுப்பேற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கோவை எனக்கு முன்னதாகவே நன்கு தெரிந்த மாவட்டம். அதனால், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து போன்ற பல்வேறு பிரச்சனைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி சிறப்பாக செயல்படுவேன். மேலும், அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் முறையாக செயல்படுத்துவேன்' இவ்வாறு அவர் கூறினார்.