கோவை மாவட்டம், சொக்கம்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் எஸ்பிஓஏ பள்ளி அருகே உள்ள மையானப் பகுதியில் இன்று ஸ்வச் பாரத் தன்னார்வலர் சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சி ஊழியர்கள், கற்பகம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கான உபகரணங்களை கோவை மாநகராட்சியின் சார்பில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் வழங்கியிருந்தார். ராக் அமைப்பின் சக்தி ஒருங்கிணைப்பில் மையானப்பகுதியில் இருந்த புதர்கள், பிளாஸ்டிக் குப்பைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டது.