ஓசை அமைப்பு சார்பில் 38 பயிற்சி வனவர்களுக்கு கோவையில் பயிற்சி முகாம்


கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஓசை அமைப்பானது சுற்றுச்சூழல் குறித்தான பல்வேறு பிரச்சனைகளில் பங்கேற்று சீரமைத்து வருகிறது. இந்நிலையில், ஓசை அமைப்பைச் சேர்ந்த சையது தலைமையில் இந்திய அளவில் இருந்து கோவை வந்த 38 பயிற்சி வனவர்களுக்கு மரம் மறுநடவு குறித்தான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டது.



முன்னதாக, கோவை மத்திய சிறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மறுநடவு செய்யப்பட்ட மரங்கள் பார்வையிடப்பட்டது. தொடர்ந்து, சக்தி சாலை விரிவாக்கப்பணிக்காக மறுநடவு செய்யப்படவிருந்த மரங்கள் பார்வையிடப்பட்டன. அப்போது, இன்று வேப்ப மரம் ஒன்று மறு நடவு செய்யப்பட்டு குமரகுரு கல்லூரியில் நடப்பட்டது.

இந்த பயிற்சி வகுப்பில் 32 பெண்கள் மற்றும் 6 ஆண்கள் என இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து மூன்று துணை வன பாதுகாவலர்கள் தலைமையில் பங்கேற்றனர்.

இதுகுறித்து துணை வன பாதுகாவலர் விஜய் நமது சிம்ப்ளி சிட்டிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:-

ஓசை அமைப்பினால் நடத்தப்பட்ட இந்த பயிற்சி வகுப்பு எங்களது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. ஒரு மரத்தினை மறுநடவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அதனை இவர்கள் மறுநடவு செய்வது மட்டுமின்றி அந்த மரம் மீண்டும் உயிர்பெற்று வளர்வதிலும் அக்கரைகொண்டு செயல்படுகின்றனர்.

தற்போது, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 38 பேரில் 31 பேர் மகாராஷ்டிரா, 5 பேர் குஜராத், 2 பேர் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இப்பயிற்சி வகுப்பினை சிறப்பான முறையில் பயின்றுள்ளனர்" என்றார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...