தட்டெழுத்து மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி அளிக்கும் திட்டத்தின் கீழ் 2017- 2018 ஆம் கல்வியாண்டில் அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிற்சி நிறுவனத்தில் சேர்ந்து பயிற்சி பெறும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிடர் இன மாணவ, மாணவியர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இத்திட்டத்திற்கான தகுதிகள், மாணவ, மாணவியர் அரசு அங்கிகாரம் பெற்ற தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி நடத்தப்பெறும் நிறுவனத்தில் தற்பொழுது பயிற்சி பெறுதல் வேண்டும்.
மேலும், மாணவ, மாணவியரின் விண்ணப்பம், தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கீழ்நிலை, மேல்நிலை பயிலும் விபரம் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டுடன் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தினர் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள் மாணாக்கர்களின் விபரங்களுடன் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்திற்கான தகுதிகள், மாணவ, மாணவியர் அரசு அங்கிகாரம் பெற்ற தட்டெழுத்து, சுருக்கெழுத்து பயிற்சி நடத்தப்பெறும் நிறுவனத்தில் தற்பொழுது பயிற்சி பெறுதல் வேண்டும்.
மேலும், மாணவ, மாணவியரின் விண்ணப்பம், தட்டெழுத்து, சுருக்கெழுத்து, கீழ்நிலை, மேல்நிலை பயிலும் விபரம் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவேட்டுடன் அரசு அங்கீகாரம் பெற்ற பயிற்சி நிறுவனத்தினர் ஜூலை மாதம் 10ம் தேதிக்குள் மாணாக்கர்களின் விபரங்களுடன் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் நேரில் அணுகுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.