கோவை மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தில் இருந்து புதிய அலுவலகத்திற்கு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பழைய அலுவலகத்திற்கு வெளியே வாடகைக்கு இருந்த அரசு அலுவலகங்கள் தற்போது புதிய கட்டிடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தண்ணீர் இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மதியம் உணவிற்கு பிறகு கையில் பாத்திரத்தோடு அங்கும் இங்கும் அழைய வேண்டிய சூழ்நிலையே தற்போது நிலவிவருகிறது. குறிப்பாக, கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த ஒருமாத காலமாக அப்பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.
மேலும், பழைய அலுவலகத்தில் தான் தண்ணீர் இல்லை என்றால் புதிய அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தண்ணீர் இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
மதியம் உணவிற்கு பிறகு கையில் பாத்திரத்தோடு அங்கும் இங்கும் அழைய வேண்டிய சூழ்நிலையே தற்போது நிலவிவருகிறது. குறிப்பாக, கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த ஒருமாத காலமாக அப்பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசிவருகிறது.
மேலும், பழைய அலுவலகத்தில் தான் தண்ணீர் இல்லை என்றால் புதிய அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.