கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தண்ணீரின்றி அதிகாரிகள் அவதி

கோவை மாவட்ட ஆட்சியர் பழைய அலுவலகத்தில் இருந்து புதிய அலுவலகத்திற்கு மாற்றி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்நிலையில் பழைய அலுவலகத்திற்கு வெளியே வாடகைக்கு இருந்த அரசு அலுவலகங்கள் தற்போது புதிய கட்டிடத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமாக ஆட்சியர் அலுவலகத்தின் பழைய கட்டிடத்தில் தண்ணீர் இல்லாமல் அதிகாரிகள், பொதுமக்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

மதியம் உணவிற்கு பிறகு கையில் பாத்திரத்தோடு அங்கும் இங்கும் அழைய வேண்டிய சூழ்நிலையே தற்போது நிலவிவருகிறது. குறிப்பாக, கழிவறைக்கு தண்ணீர் வசதி இல்லாததால் கடந்த ஒருமாத காலமாக அப்பகுதி முழுவதுமே கடும் துர்நாற்றம் வீசிவருகிறது. 

மேலும், பழைய அலுவலகத்தில் தான் தண்ணீர் இல்லை என்றால் புதிய அலுவலகத்தில் உள்ள கழிவறைகள் அனைத்தும் பூட்டு போட்டப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

கோவை மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனைகள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அங்கு வரும் பொதுமக்கள், ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...