கோவையில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்று மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோவையில் உள்ள பேரூர் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்பு மிக்க கிணறு, குனியமுத்தூர் வாய்க்கால், மலுமிச்சம்பட்டி குட்டை என அனைத்திலும் அதிகம் காணப்பட்ட குப்பை, சீமைகருவேல மரங்கள், புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், குளங்களை தூர்வாரியும் வருகின்றனர். இதில் இதுவரை வாரந்தோறும் அதிக அளவிலாக 500க்கும் மேற்பட்ட தனார்வலர்கள் கலந்து கொண்டு இப்பணியை செய்து வருகின்றனர். மேலும், இப்பணிகளில் நமது கோவை நமது பசுமை, இ.எஸ்.ஐ அமைப்பு, தமிழ் பவுண்டேஷன் கனடா, கேமரூன் உற்பத்தி இந்தியா நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தூய்மை பணியை செய்து வருகின்றனர். 



இதனை தொடர்ந்து, இருபதாவது வார களப்பணியாக பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை எனும் அணையை மீட்டெடுக்கும் முயற்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு களம் காண உள்ளனர். கோயமுத்தூர் திருப்பணையின் மூலமாக உக்கடம் குளத்திற்கு நீர் வரும் அணைகளில் முக்கிய அணையாகும். இவ்வணை சுமார் 530 அடி கொண்டது தற்போது 200 அடி வரை அணை முழுவதும் புதர் மண்டி நிரம்பி உள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டு அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்! 



இடம்:பேரூர் தமிழ் கல்லூரி அருகில், நொய்யல் ஆற்று பாலம்.

நாள்:25/06/2017

நேரம்:காலை 7.00 முதல் 9.00வரை

ஒருங்கிணைப்பு:கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

தொடர்புக்கு:8015714790, 94432 37422, 9789143103, email:[email protected]

குறிப்பு: 

முழுவதும் புதர்மண்டி இருப்பதால் தன்னார்வலர்கள் தாங்கள் வரும்பொழுது கொத்து,மண்வெட்டி, அருவாள் கொண்டு வரவும்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...