இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சிக்கி சிங்காநல்லூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிங்காநல்லூரை சேர்ந்த அருள்பிரகாஷ், கார்த்திகேயன் ஆகியோர் கைதானர்.


Coimbatore: கோவை இருகூர் அருகே செல்போன் பறித்து தப்பிஓட முயன்ற இருவர் வாலிபர்கள், பொதுமக்கள் விரட்டியதில் சிக்கி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

கோவை இருகூர் அருகே உள்ள மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராம்குமார். இவர், நேற்று முன்தினம் மகாத்மாகாந்தி ரோடு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அவரிடம் இருந்த செல்போனை திடீரென பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

உடனே சுதாரித்துக்கொண்ட ராம்குமார் அவர்களை விரட்டி ஓடினார். அப்போது அந்த இடத்தில் இருந்த பொதுமக்களும் அந்த வாலிபர்களை துரத்தினர். பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக துரத்தி வர, பயந்து ஓடிய இரு வாலிபர்களும் கீழே விழுந்தனர்.

உடனே அந்த இருவரையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து, சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த அருள்பிரகாஷ் (27), கார்த்திகேயன் (28) என தெரியவந்தது.

இதையடுத்து, சிங்காநல்லூர் போலீசார் இருவரையும் முறையாக கைது செய்து, பறிக்கப்பட்ட செல்போனை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...