கோவையில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்!

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோவையில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள் மற்றும் வரலாற்று மிக்க கல்வெட்டுக்கள் போன்றவற்றை மீட்டு அடுத்த தலைமுறைக்கு கொடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதுவரை கோவையில் உள்ள பேரூர் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், வெள்ளலூர் குளம், செங்குளம், சுண்டக்காமுத்தூர் வரலாற்று சிறப்பு மிக்க கிணறு, குனியமுத்தூர் வாய்க்கால், மலுமிச்சம்பட்டி குட்டை என அனைத்திலும் அதிகம் காணப்பட்ட குப்பை, சீமைகருவேல மரங்கள், புதர்கள், பிளாஸ்டிக் பொருட்களை அகற்றியும், குளங்களை தூர்வாரியும் வருகின்றனர். இதில் இதுவரை வாரந்தோறும் அதிக அளவிலாக 500க்கும் மேற்பட்ட தனார்வலர்கள் கலந்து கொண்டு இப்பணியை செய்து வருகின்றனர். மேலும், இப்பணிகளில் நமது கோவை நமது பசுமை, இ.எஸ்.ஐ அமைப்பு, தமிழ் பவுண்டேஷன் கனடா, கேமரூன் உற்பத்தி இந்தியா நிறுவனம் மற்றும் பொதுமக்கள் இணைந்து தூய்மை பணியை செய்து வருகின்றனர். 



இதனை தொடர்ந்து, இருபதாவது வார களப்பணியாக பேரூர் தமிழ் கல்லூரி அருகில் உள்ள நொய்யல் ஆற்று பாலத்தில் கி.பி 12ஆம் நூற்றாண்டில் கொங்கு சோழர்களால் கட்டப்பட்ட தேவிசிறை எனும் அணையை மீட்டெடுக்கும் முயற்சியில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு களம் காண உள்ளனர். கோயமுத்தூர் திருப்பணையின் மூலமாக உக்கடம் குளத்திற்கு நீர் வரும் அணைகளில் முக்கிய அணையாகும். இவ்வணை சுமார் 530 அடி கொண்டது தற்போது 200 அடி வரை அணை முழுவதும் புதர் மண்டி நிரம்பி உள்ளது. அதனை சுத்தம் செய்யும் பணியினை மேற்கொண்டு அணைக்கட்டை பாதுகாக்க வாரீர்! 



இடம்:பேரூர் தமிழ் கல்லூரி அருகில், நொய்யல் ஆற்று பாலம்.

நாள்:25/06/2017

நேரம்:காலை 7.00 முதல் 9.00வரை

ஒருங்கிணைப்பு:கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

தொடர்புக்கு:8015714790, 94432 37422, 9789143103, email:[email protected]

குறிப்பு: 

முழுவதும் புதர்மண்டி இருப்பதால் தன்னார்வலர்கள் தாங்கள் வரும்பொழுது கொத்து,மண்வெட்டி, அருவாள் கொண்டு வரவும்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...