கோவை மாவட்டம், கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாயகி (52). இவருக்கு கடந்த ஜூன் 16ம் தேதியன்று காய்யச்சல் ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் சிகிச்சை பெற கோவை அரசு மருத்துவமனைக்கு சென்ற போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ரங்கநாயகி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இதனிடையே, டெங்கு காய்ச்சலின் பாதிப்பு காரணமாக கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 5 பேரும், உதகையைச் சேர்ந்த ஒருவரும், திருப்பூரைச் சேர்ந்த ஒருவரும் என மொத்தம் 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர் என கோவை அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல் தெரிவித்துள்ளார்.