ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும்- ஈஷாவில் யோகா நிகழ்ச்சியில் ஆளுநர் பேச்சு


உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

3 வது உலக யோகா தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் மகேஷ்சர்மா, ஈஷா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ், பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.



இதனைத்தொடர்ந்து, இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் வித்யசாகர்ராவ் பேசுகையில், யோகா என்பது இந்தியா உலகிற்கு கொடுத்த பரிசு. மன அழுத்தம் என்பது அனைத்து துறைகளிலும் உள்ளது. அதனை நீக்க சிறந்த வழி யோகா. 

ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க இளைஞர்கள் அதிகளவில் யோகா கற்க வேண்டும். யோகா மூலம் போதைக்கு அடிமையானவர்களை மீட்க முடியும். தமிழகம் மற்றும் மஹாராஷ்டிராவில் தனது கட்டுப்பாட்டில் உள்ள 40 பல்கலைக் கழகங்களில் யோகா கற்றுத் தர அறிவுறுத்தப்படும்" என்றார்.

இதற்கு முன்னதாக பேசிய ஜக்கி வாசுதேவ், பள்ளி மாணவர்களிடம் தற்கொலை எண்ணம் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் ஈஷா யோகா மையம் சார்பில் யோகா கற்றுத்தரப்படுத். நல்ல மனிதர்களை உருவாக்குவதன் மூலமே நல்ல நாட்டை உருவாக்க முடியும். யோகா மூலம் நல்ல மனிதர்களை உருவாக்க முடியும்" என்றார்.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...