பாஜக-வின் குடியரசு வேட்பாளருக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் சிறுபான்மை மக்களின் விரோதிகள்- புதிய தமிழகம் கட்சி தலைவர் விமர்சனம்

பாஜக-வின் குடியரசு வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்க்கு எதிராக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

எளிய தலித் ஒருவரை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்த பாஜக-விற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ராம்நாத் கோவிந்திற்கும் எனது வாழ்த்துக்கள். ராம்நாத் கோவிந்தை பாஜக தேர்வு செய்திருப்பது சமூக நீதியின் புதிய பரிணாமம். ராம்நாத்கோவிந்துக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிக்க வேண்டும். அவரை போட்டியின்று ஏக மனதாக தேர்வு செய்ய வேண்டும். 

எதிர்கட்சிகள் சார்பில் ஒரு பொது தலித் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு பதில் அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி, ராம்நாத் கோவிந்த் தொடர்பாக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என்று விமர்சனம் செய்தார்.

மேலும், தலித் வேட்பாளரை பாஜக-வே தேர்வு செய்த பிறகு இதுபோன்ற கருத்துக்களை கூறுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் கிருஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு, அவர் ஜனாதிபதி ஆகும் பட்சத்தில் மத சிறுபான்மையர்களும், சமூக சிறுபான்மையர்களும் நிச்சயமாக பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...