பாஜக-வின் குடியரசு வேட்பாளருக்கு எதிராக கருத்து கூறுபவர்கள் சிறுபான்மை மக்களின் விரோதிகள்- புதிய தமிழகம் கட்சி தலைவர் விமர்சனம்

பாஜக-வின் குடியரசு வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்க்கு எதிராக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள், தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சனம் செய்துள்ளார்.

கோவை குனியமுத்தூர் பகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேட்டியளிக்கையில் கூறியதாவது:-

எளிய தலித் ஒருவரை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளராக தேர்வு செய்த பாஜக-விற்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். ராம்நாத் கோவிந்திற்கும் எனது வாழ்த்துக்கள். ராம்நாத் கோவிந்தை பாஜக தேர்வு செய்திருப்பது சமூக நீதியின் புதிய பரிணாமம். ராம்நாத்கோவிந்துக்கு காங்கிரஸ், அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் அனைத்தும் ஆதரவு அளிக்க வேண்டும். அவரை போட்டியின்று ஏக மனதாக தேர்வு செய்ய வேண்டும். 

எதிர்கட்சிகள் சார்பில் ஒரு பொது தலித் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்ற திருமாவளவன் கருத்துக்கு பதில் அளித்த டாக்டர் கிருஷ்ணசாமி, ராம்நாத் கோவிந்த் தொடர்பாக குறுகிய மனப்பான்மையுடன் கருத்து கூறுபவர்கள் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களின் விரோதிகள் என்று விமர்சனம் செய்தார்.

மேலும், தலித் வேட்பாளரை பாஜக-வே தேர்வு செய்த பிறகு இதுபோன்ற கருத்துக்களை கூறுவது ஏற்புடையதல்ல எனவும் அவர் தெரிவித்தார். ராம்நாத் கோவிந்த் கிருஸ்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் எதிரானவர் என்ற குற்றச்சாட்டு உள்ளதே என்ற கேள்விக்கு, அவர் ஜனாதிபதி ஆகும் பட்சத்தில் மத சிறுபான்மையர்களும், சமூக சிறுபான்மையர்களும் நிச்சயமாக பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கூறினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...