அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்று கோவையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவு உற்சாகமாக நடைபெற்றதாக குறிப்பிட்ட அவர், பல கருத்துக்கணிப்புகளும் NDA-வின் முன்னிலை குறித்து ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தார். திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக பிரதிபலிக்கும் என்றும், மாற்றத்திற்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.

mAnypN3mfQkYmS3PH6cdnFvV1ptg4bFVR49OnHT0.jpg

தமிழகத்தில் ‘டபுள் இன்ஜின்’ அரசு அமைந்தால் மாநில வளர்ச்சிக்கு புதிய திசை கிடைக்கும் எனவும், மக்களின் எதிர்பார்ப்பு விரைவில் நிறைவேறும் எனவும் தெரிவித்தார். மேலும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநிலங்களில் எதிர்பார்ப்புகளை மீறி பாஜக வெற்றி பெற்றதை நினைவுகூர்ந்த அவர், தமிழக அரசியலிலும் பெரிய மாற்றம் ஏற்படும் என நம்பிக்கை வெளியிட்டார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது போக்குவரத்துத் துறை ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஊழல் சம்பவங்கள் விசாரணைகள் மூலம் வெளிச்சத்துக்கு வரும்; சட்டம் தனது கடமையைச் செய்யும்” என்றார்.

அதேபோல், அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு, “நிச்சயம் வழங்கப்படும்” என உறுதியான பதில் அளித்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...