கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.  அதில் ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Coimbatore: கோவை கண்ணப்பநகர் பகுதியில் உள்ள 11 to 11 டாஸ்மாக் பார் அருகே அமைந்திருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) திடீரென வெடித்து தீப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.



நேற்று காலை ஏற்பட்ட இந்த விபத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக டிரான்ஸ்பார்மர் பலத்த சத்தத்துடன் வெடித்ததாக கூறப்படுகிறது. வெடிப்பின் தாக்கத்தில் டிரான்ஸ்பார்மர் தீப்பற்றிய நிலையில் சுற்றியிருந்தவர்களின் மீது தீப்பொறி சிதறியது.

இதில் மதுரை வீரன் (23) என்பவருக்கு உடலில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. மேலும் இருவர் லேசான காயங்களுடன் தப்பினர். காயமடைந்த மதுரை வீரன் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற இருவர் முதலுதவிக்குப் பிறகு வீடு திரும்பினர்.



சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மின்சார வாரிய அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்து மின் விநியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதனால் கண்ணப்பநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில மணி நேரம் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரான்ஸ்பார்மர் வெடிப்பிற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...