கோவை வேளாண் பல்கலையில் இரண்டாம் தர கட்-ஆப் மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடம் வழங்கக் கோரி பெற்றோர்கள் போராட்டம்


கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழக கலந்தாய்வில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், நீட் தேர்வின் முடிவிற்கு பின் மருத்துவ படிப்பிற்கு சென்று விட்டால் கட் ஆப்பில் அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு இடம் வழங்கக்கோரி பெற்றோர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில் நடப்பாண்டிற்கான மாணவர் சேர்க்கையில் இளங்கலை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று துவங்கியது. இதில் 200 முதல் 197 வரை கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர். முதல் நாளில் 397 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். 

இந்த கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், தேர்வு முடிவுகளுக்கு பின்னர் மருத்துவ படிப்பிற்கு செல்ல உள்ளதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் நீட் தேர்வு முடிவுகளுக்கு பின்னர், மருத்துவ படிப்புகளுக்கு சென்றால் காலியாகும் இடங்களுக்கு கட் ஆப்பில் அடுத்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு வழங்கக்கோரி பெற்றோர்கள் பல்கலைகழக டீன் மகிமைராஜா அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை பல்கலைகழக நிர்வாகம் ஏற்க மறுத்ததால் அதிகாரிகளுடன் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வு என்பது மாணவர்களுக்கு மட்டுமின்றி, பெற்றோர்களுக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாகவும், அத்தேர்வு முடிவுகளுக்கு பின்னர் வேளாண்மை பல்கலைகழக கலந்தாய்வை நடத்தி இருக்க வேண்டுமென பெற்றோர்கள் தெரிவித்தனர்.

அரசு விதிகளுக்கு உட்பட்டே கலந்தாய்வு நடத்தப்படுவதாகவும், மறு கலந்தாய்வு நடத்த வாய்ப்பில்லை எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது

Newsletter

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...