மறைந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியின் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

கோயம்புத்தூர் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் கலையரசன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மறைந்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.என்.பகவதி-யின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது, பின்னர், அவரது வாழ்க்கை முறை குறித்து சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.