தமிழகத்தில் இந்த ஆண்டு வரும் அக்டோபர் 18ல் தீபாவளி கொண்டாடப்படுவதையொட்டி, தீபாவளிக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு ஜூன் 18ம் தேதி முதல் தொடங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேபோல், தீபாவளி சிறப்பு ரயில்கள் மற்றும் கூடுதல் ரயில்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் மற்றும் சென்ட்ரல் ஆகிய ரயில் நிலையங்களில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்றும் தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் சென்னையில் குடியேறிவர்கள் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், தீபாவளிப் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கையான நிகழ்வாகும். எனவே, இந்த ஆண்டு தமிழகத்தில் வரும் அக்டோபர் 18ல் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், வரும் 18 முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது.
சென்னையில் வசிக்கும் தென்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும் சென்னையில் குடியேறிவர்கள் ஆண்டுதோறும் தீபாவளிப் பண்டிகைக்கு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனால், தீபாவளிப் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிடுவது வாடிக்கையான நிகழ்வாகும். எனவே, இந்த ஆண்டு தமிழகத்தில் வரும் அக்டோபர் 18ல் தீபாவளி கொண்டாடப்படுகிறது. ரயில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதால், வரும் 18 முதல் தீபாவளி ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்க இருக்கிறது.